Sunday 25 December 2011

மே பதினேழு இயக்கமும் முல்லைப் பெரியாரும்!

மே பதினேழு இயக்கம் சென்னை மெரினாவில் நடத்திய கூட்டத்திற்கு சென்றிருந்தேன். ஏதோ ஆக்கப் பூர்வமாக செய்வார்கள் என நினைத்து சென்றேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது.


முதலில் அங்கு பேசப் பட வேண்டிய பிரச்சினையான "முல்லைப் பெரியாரைக்" காட்டிலும் அதிகம் பேசப் பட்டதுபாடப் பட்டது ஈழப் பிரச்சினைக் குறித்தும்பிரபாகரன் குறித்துமே. அப்போது  தானே கைத் தட்டல் வாங்க முடியும்.

இந்த மே பதினேழு இயக்கத்தின் நோக்கம் என்ன என்பது இதுவரை குழப்பமாகவே இருக்கிறது. அவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் ஐ.டி துறை மற்றும் அந்நியன் படத்தை ரசிக்கும் இளைஞர்கள் மட்டுமே.

பாடலாசிரியர் தாமரை:

கூட்டத்தில் பேசிய கவிதாயினி தாமரை கூறுகையில் இது ஜாதிமத சார்பற்ற கூட்டம் என்றார். உண்மைதான் ஆனால் வர்க்கம் சார் கூட்டம் என்பதை அவர் உணரவில்லையா?

இது விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல் என்பது மக்களுக்கே புரிந்து தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அது தான் உண்மையான போராட்டம். அதை துவக்கியவர்  மக்களை தூண்டியவர் வை.கோ என்பதாக புகழாரம் பாடினார். இவர்கள் அடித்தட்டு மக்களிடம் இப்பிரச்சினைக் குறித்து எடுத்து செல்ல வில்லை. அதனால் அவர்களின் பங்களிப்பு இங்கில்லை. இது  படித்தவனால்எஞ்சிநியர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும்மற்றவர்களுக்கு இது புரியாதுதாங்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும் என்ற மமதையாகத் தோன்றுகிறது.

மேலும் தாமரை பேசுகையில் இந்தியன் என்ற உணர்வு நமக்கு வேண்டாம்நாம் தமிழர்கள் என சொல்வது தான் பெருமை. மலையாளிகள் நம்மை ஏளனமாக நினைப்பதாக பேசினார். மேலும்  தமிழனைத் தவிற அனைவரும் தங்கள் மாநிலம் தனி நாடு என்பதாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் இந்தியா என சொல்லிக் கொள்வதில்லை என்பதாக பேசி நாமும் அப்படித்தான் இருக்க  வேண்டும் என்றார்.

இங்கு தாமரைக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது. இனி மலையாளிகளின்  படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என சொல்லும் தைரியம் இருக்கிறதாஉதாரணத்திற்கு கவுதம் மேனனின்  ஆஸ்தான பாடலாசிரியரான இவரால் இனி கவுதம் மேனன் படத்திற்கு பாடல் எழுதாமல் இருக்க முடியுமா?


வை.கோ:

கூட்டத்தின் துவக்கத்தில் மீடியாக் காரர்களுக்கும் அங்குக் கூடியிருந்த மக்களுக்கும் வாக்கு வாதம் துவங்கியது. மறைக்காமல் ஓரம் போக சொல்லி பலர் கூச்சளிட்டும் சிலர் பேப்பரை சுருட்டி  அவர்கள் மீதும் அடித்தனர். இதில் மீடியாக்கள் கோபித்துக் கொண்டு செல்லஅவர்களை வை.கோ காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானப் படுத்திநீங்கள் தான் இந்தியாவின் தூண்கள் என  அந்த பிக்காளி ஊடகங்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார். பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் பேசிய வை.கோமுல்லைப் பெரியாறு உடையாது ஆனால் இந்தியா உடையும் தமிழகம் தனியாகப் பிரியும் என்றார். மேலும் ஏசு கிறிஸ்து ஒரு மிகப் பெரிய போராளி  என துதி பாடினர்.

ஏசு கிறிஸ்துவைப் போராளி என சொன்னால் இவரின் போராட்ட குணம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது நான் சொல்லத் தேவையில்லை. தமிழகம் தனியாகப் பிரிந்தால் இவர்கள் கொள்ளை  வேண்டுமானால் அடிக்கலாம். வேறொன்றும் செய்ய இயலாது.

பாரதிராஜா:

கூட்டத்தில் ஓரளவுக்கு சரியாகப் பேசியவர் என்றால் அது பாரதிராஜாவைத் தான் சொல்ல முடியும். மனதில் பட்டதை பளிச்செனப் பேசினார்.

காரணம் அவர் பேசுகையில்முன்னர் இது போன்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது வந்தக் கூட்டத்தைப் பார்த்து பெரிதும் நம்பியதாகவும்ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் அவரவர்  வேலையைப் பார்க்கப் போய் விட்டதாகவும் கூறிஅது போலில்லாமல் நன்கு சிந்தித்து களப் போராளிகளாக இருக்க வேண்டும் என்றார்.

மலையாளிகளுக்கு எதிராக கடும் காட்டததுடன் பேசிய இந்த பாரதிராஜாவின் அடுத்த பட நாயகி "இனியா" ஒரு மலையாளி. அதற்காக அவரை படத்திலிருந்து நீக்க முடியுமாஇவர்களுக்கு  கொள்கை வேறுதொழில் வேறு.

பாரதிராஜா உட்பட கூட்டத்தில் பேசிய அனைவரும் பேசுகையில் திருமாவளவனையும்வை.கோ-வையும் தலையில் தூக்கி வைத்துப் பேசினர். மேலும் வார்த்தைக்கு வார்த்தை பிரபாகரன் குறித்து  பேசினர்.

திருமுருகன்:

இனித் தமிழனுக்கு எங்கு பிரச்சினை வந்தாலும் நாமெல்லாம் மெரினாவில் கூட வேண்டும். கூடுவோமாஎன உரக்கக் கத்த கூட்டத்தில் இருந்தவர்களும் எதற்கு என தெரியாமலே கூடுவோம்  என்றனர்.

அதாவது எந்தப் பிரச்சினை எங்கு நடந்தாலும் நாம் மெரினாவில் கூடிக் கலைவோம். போராட்டக் களத்திற்கு போக வேண்டாம். பாது காப்பாக இருக்கலாம் என்பது போல் இருந்தது.

மேலும் அவரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியதுதமிழகத்தில் பால்பேருந்து கட்டணங்களை உயர்த்திய பாசிச ஜெயாவுக்கு எதிராக ஏன் நீங்கள் மக்களை ஒருங்கிணைத்து போராடவில்லை?  ஒருவேளை அதில் தமிழர்கள் பாதிக்கப் படவில்லையோ?

இல்லை அப்படி செய்தால் கம்பி எண்ண நேரிடும் என்ற அச்சமோ?

ஒரு மக்கள் அமைப்பு என்பது மக்களுக்கான கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்த அமைப்பில் இணைபவர்களுக்கு அவை பயிற்றுவிக்கப் பட வேண்டும். வர்க்கங்களின்  அடிப்படையில் மக்களை மக்களின் பிரச்சினைகளுக்காக அணி திரட்ட வேண்டும். அதை விடுத்து ஒரு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரபலங்களை சேர்த்துக் கொண்டு இயங்கினால் அது  நிச்சயம் மக்களுக்காக ஒன்றும் செய்து விட முடியாது. பிரபலங்களுக்காக நடத்தப் பட்ட கூட்டம் போல் ஆகி விடும்.

மேலும் அது எதிர் காலத்தில் மக்களுக்கு எதிரான போலிக் கட்சி மற்றும் போலி அமைப்புகளின் வரிசையில் சேரக் கூடும். இந்த மே பதினேழு இயக்கமும் அதை நோக்கித்தான் செல்கிறது.